யாழில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு : பொலிஸாரின் நடவடிக்கை
யாழ்ப்பாணம் (Jaffna) - ஆவரங்கால் சிவன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றிரவு (26.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர், ஆவரங்கால் சிவன் கோவிலில் திருடிவிட்டு மற்றொரு கோவிலிலும் திருட முற்பட்ட போதே அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில், சந்தேக நபரிடமிருந்து, திருடப்பட்ட பணத்தினையும் சில பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், பொலிஸ் விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |