மானியமாக வழங்கப்பட்பட்ட 320 தென்னை மரங்களை விற்பனை செய்த நபர்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு
வடக்கு மாகாண தென்னை வலய திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் 5 ஏக்கருக்கு மானியமாக வழங்கபட்பட்ட 320 தென்னை மரங்களை நபர் ஒருவர் விற்பனை செய்த சம்பவம் வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கமானது தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கில் தென்னை உற்பத்தி வலயத்தை உருவாக்க கடந்த வருடம் முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக ஏக்கருக்கு 64 தென்னை மரங்கள் வீதம் அரச மானியமாக வழங்கப்படுவதுடன், அதற்கான பசளைகள், நீர் விநியோக நடவடிக்கைக்கான கொடுப்பனவுகள் என்பனவும் அரச நிதியில் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.
அதிகாரிகளின் அசமந்தப் போக்கு
அந்தவகையில், வவுனியா மாவட்ட தென்னை அதிகார சபைக்குட்பட்ட பம்பைமடு கமநல அபிவிருத்தி பிரிவில் உள்ள செக்கட்டிப்புலவு பகுதியில் 5 ஏக்கர் காணி ஒன்றினை கொண்டிருந்த வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபர் ஒருவர் மானியமாக தென்னை மரங்களை நடுவதற்கு விண்ணப்பித்து ஏக்கருக்கு 64 தென்னைகள் வீதம் 320 தென்னை மரங்களை பெற்றுள்ளார்.

குறித்த தென்னை மரங்களை அந்த காணியில் நடுகை செய்யாது 250 ரூபாய் வீதம் விற்பனை செய்து விட்டு அந்நபர் மீண்டும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மானிய திட்டமானது கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அவை தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்று வருகின்றது.
ஆனாலும், இவ்வாறான அரச மானியத் திட்டத்தில் 320 தென்னைகளை பெற்று அதனை 250 ரூபாய் வீதம் விற்பனை செய்தமை தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தாது இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், குறித்த பம்பைமடு பகுதிக்குட்பட்ட இடங்களில் வேறு சிலருக்கு வழங்கப்பட்ட மானிய தென்னைகள் நடப்பட்டு பல மாதங்கள் கடந்தும் அவர்களது தென்னை நடுகையை அபிவிருத்தி உத்தியோகத்தர் சென்று பார்வையிட்டு சிபாரிசு செய்யாமையால் அவர்களுக்கான பசளை மற்றும் நீர் விநியோகப் கொடுப்பனவுகள் இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri