தென்னிலங்கையில் கொல்லப்பட்டவர் யார்....! பொலிஸார் வெளியிட்ட தகவல்
களுத்துறையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 43 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகமது ஷபிக் எனப்படும் இந்த நபர் களுத்துறையில் வெட்டுவேகடுவ பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூடு
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் மூன்று பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் இன்று காலை 8.55 மணியளவில் காலி வீதியில் இருந்து பள்ளிவாசல் வீதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் டி-56 (T-56) ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மேலதிக விசாரணைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.