கிளிநொச்சி பகுதியில் முதியவர் ஒருவர் சடலம் மீட்பு
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தா பகுதியில் தனிமையில்
இருந்த முதியவர் ஒருவர் இன்று(15) அவரின் வீட்டின் பின் பக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் தம்பையா கந்தசாமி என்ற 65வயது நிரம்பியவர் எனவும் 5 பிள்ளைகளின் தந்தை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சடலம் மீட்பு நடவடிக்கை
பளை இத்தாவில் பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) தனது தந்தையான தம்பையா கந்தசாமி என்வரை வீட்டில் தனிமையில் விடுத்து அவர் உறவினர் வீட்டிற்கு வவுனியா சென்று இன்று வீடு திரும்பிய போதே குறித்த சடலத்தை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து பளை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவானும் சடலத்தை பார்வையிட்டதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.