ஒருவரை வாளால் வெட்டி எரியூட்டி கொலை செய்த பெண்
ஆண் ஒருவரை வாளால் வெட்டி, எரியூட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக மொனராகலை பிபிலை நாகல பிரதேசத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட நபர், கொலை செய்த பெண் நடத்தி வரும் வர்த்தக நிலையத்திற்கு நேற்று மாலை சென்றிருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரான பெண்ணும் கொலையுண்ட நபரும் சண்டையிட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் போது பெண், நபரை வாளால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து வர்த்தக நிலையத்தில் இருந்த பெட்ரோலை நபரின் மீது ஊற்றி தீயிட்டுள்ளார். உயிரிழந்தவரின் உடல் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிபிலை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 14 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam