ஒருவரை வாளால் வெட்டி எரியூட்டி கொலை செய்த பெண்
ஆண் ஒருவரை வாளால் வெட்டி, எரியூட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பாக மொனராகலை பிபிலை நாகல பிரதேசத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட நபர், கொலை செய்த பெண் நடத்தி வரும் வர்த்தக நிலையத்திற்கு நேற்று மாலை சென்றிருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபரான பெண்ணும் கொலையுண்ட நபரும் சண்டையிட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் போது பெண், நபரை வாளால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து வர்த்தக நிலையத்தில் இருந்த பெட்ரோலை நபரின் மீது ஊற்றி தீயிட்டுள்ளார். உயிரிழந்தவரின் உடல் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிபிலை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
