இவரைக் கண்டால் உடன் அறிவிக்கவும்: பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
மட்டக்களப்பு புத்தூரைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 26ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடளித்துள்ளனர்.
நகரிலுள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த கணேஸ் விக்கினேஸ்வரன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிசார் கோரிக்கை
கடந்த 19ஆம் திகதி வழமைபோல வீட்டில் இருந்து உணவகத்திற்கு வேலைக்கு சென்றவர் அன்று வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தொடர்பு கொண்ட போது மாமாங்க கோவில் உற்றவத்தையிட்டு அங்கு தான் வேலை செய்யும் முதலாளி உணவு கடை அமைத்துள்ளதாகவும் அங்கு நிற்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கடந்த 26ஆம் திகதி முதலாளி சம்பளம் தரவில்லை தந்ததும் வருவதாக தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கோவில் உற்சவம் முடிவுற்ற பின்னர் அவரின் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் அவர் வீடு திரும்பாததையடுத்து அவரை உறவினர்கள் தேடியும் அவரை காணவில்லை என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பாக தகவல்கள் கிடைத்தால் உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கே அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




