மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவர்
பொலநறுவை, ஹிங்குராங்கொட பிரதேசத்தில் கோடரியால் தனது மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கோடாரி தாக்குதலால் பலத்த காயமடைந்த அந்தப் பெண், உள்ளூர்வாசிகளால் சிகிச்சைக்காக பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து வந்ததாகவும், அத்தகைய வாக்குவாதம் தாக்குதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணை
உயிரிழ்த பெண் தனது வீட்டின் பின் புறத்தில் விறகு சேகரித்துக் கொண்டிருந்தபோது, கணவன் கோடரியால் தலையில் தாக்கப்பட்டதாக முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் 55 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
