ட்ரம்பின் வீட்டிற்குள் நுழைந்த நபர் படுகொலை.. அதிரடியாக களமிறங்கியுள்ள FBI - வெளியாகும் பரபரப்பு தகவல்கள்
புதிய இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பின் மார்-எ-லாகோ வீட்டின் பாதுகாப்பான சுற்றளவில் நுழைந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் FBI அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மார்-எ-லாகோ இல்லத்திற்குள் நுழைய முயன்ற 20 வயதுடைய ஒருவரை சுட்டுக் கொன்றதாக அமெரிக்க இரகசிய சேவை கூறுகிறது. அந்த நேரத்தில் ஜனாதிபதி டிரம்ப் வாஷிங்டன் டி.சி.யில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டின் பாதுகாப்பு சுற்றளவுக்குள் நுழைந்த அந்த நபரை பாம் பீச் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தைச் சேர்ந்த முகவர்களும் துணை அதிகாரியும் எதிர்கொண்டதாக கூறப்படுகின்றது.
பெட்ரோல் கெனிஸ்டர் மற்றும் துப்பாக்கியை எடுத்துச் சென்ற குறித்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போதே குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் தாங்கள் கெமராக்கள் அணிந்திருந்ததாகவும் தாக்குதல் நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சுடப்பட்ட நபரின் அடையாளம் அல்லது அவர் உள்ளே நுழைய முயன்ற சூழ்நிலைகள் இன்னும் தெரியவில்லை. எத்தனை துப்பாக்கிச் சூடுகள் சுடப்பட்டன, அல்லது அந்த நபரின் துப்பாக்கியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் நோக்கம் இன்னும் முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், டொனால்ட் ட்ரம்பைப் பாதுகாக்கும் போது ஆயுதமேந்திய சந்தேக நபர்களை அதிகாரிகள் தாக்குவது இது முதல் முறை அல்ல.
கடந்த 2024 ஜூலையில் , பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது, ஒருவர் அவரை நோக்கிச் சுட்டார்.
இதன்போது ட்ம்பின் காதில் துப்பாக்கிச் சூடு பட்டதில் காயம் ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் நடத்திய பாதுகாப்பு தாக்குதலில் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற தாக்குதல்தாரி கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தமை குறிப்பிட்டதக்கது.
முதலாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பின் மார்-எ-லாகோ வீட்டின் பாதுகாப்பான சுற்றளவில் நுழைந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு வளவு
இது தொடர்பில் இரகசிய சேவை மூலம் தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவமானது, இலங்கை நேரப்படி மாலை 06:30 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சுட்டுக் கொல்லப்பட்ட நபர், ட்ரம்பின் வீட்டின் வடக்கு வாயிலுக்கு அருகில் ஒரு துப்பாக்கி மற்றும் எரிபொருள் கேனுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam