ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் முறுகல்: ஒருவர் அடித்துக் கொலை
ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்தின் போது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்பெலிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தப்பியோட்டம்
குறித்த நபர் விருந்தின் போது மற்றுமொரு நபருடன் தகராறு செய்ததாகவும், அந்த நபர் அவரை தாக்கி நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
