கொழும்பில் வாடகை அறையில் தங்கியிருந்தவர் கொடூரமாக கொலை
கொழும்பு, தெமட்டகொட பகுதியில் நேற்று முன்தினம் வாடகை அறையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 69 வயதான மாதம்பிட்டியகே சோமரத்ன என்பவர் எனவும் அவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.
வாடகை அறை
கொலை செய்யப்பட்டவர் தனது முச்சக்கர வண்டி தொழிலுக்கு மேலதிகமாக வட்டிக்கு கடன் வழங்கும் நபர் என்றும், அவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வாடகை அறையில் தங்கியிருந்தவரை கொலை செய்தவர்கள், கதவை மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 
     
கொலையாளிகளை கண்டுபிடிக்க சிசிடிவி கமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        