பிரிந்து வாழும் மனைவி: கணவன் எடுத்த தவறான முடிவு - சிக்கியது கடிதம்
திருகோணமலை-நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (25.05.2023) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் மனைவி தனது பிள்ளையுடன் மட்டக்களப்பில் வாழ்ந்துள்ள நிலையில் தொலைபேசியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் உயிரை மாய்த்திருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
மரணத்திற்கான காரணம்
எனினும் மரணத்திற்கான காரணத்தை குறித்த நபர் எழுதி வைத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 4 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
