கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த விபரீதம்
கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு நாயாற்று கடலில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(16.08.2026) இடம்பெற்றுள்ளது.
நண்பர்களுடன் கடலுக்கு சென்ற நபர்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான சதீசன் என்ற நபர், கனடாவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் தன்னுடைய 5 நண்பர்களுடன் முல்லைத்தீவினை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இதன்போது, நண்பகல் அளவில் நாயாற்று பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையில், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சடலம் மீட்பு
அருகில் நின்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவரின் சடலம், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.