யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
4ஆம் வட்டாரம், மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த ஏரம்பு தட்சணாமூர்த்தி (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி இவர் பூப்புனித நீராட்டு விழாவுக்கு செல்வதற்காக வீதியை கடந்துள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக...
இதன்போது அதிவேகமாக வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்மீது மோதியதில் முதியவர் அவ்விடத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் வேலணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri