கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தொழிலதிபர்
கொழும்பில் உள்ள City of Dreams ஹோட்டலின் சொகுசு அறையில் செவ்வாய்க்கிழமை மாலை 45 வயதுடைய ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்டியை சேர்ந்த நபர், City of Dreams ஹோட்டலில் நான்கு நாட்களாக தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது அறையின் கதவு மூடப்பட்டிருந்தபோது சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

மரணத்திற்கான காரணம் தூக்கில் தொங்கியமையே என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரை மாய்த்துள்ளார் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும் City of Dreams வளாகத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட கேசினோவில் சூதாட்டத்தில் பெரும் தொகை பணத்தை இழந்த நிலையில் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri