மனைவியுடன் சண்டை-மூன்று மாதங்கள் மது அருந்திய நபர் மரணம் (Video)
மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தொடர்ந்தும் மூன்று மாதங்கள் மதுபானம் அருந்திய நபர் உயிரிழந்த சம்பவம் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நடந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபரின் சடலம் திஸ்ஸமஹாராம டிக்கிரி உயன பிரதேசத்தில் வாழைத்தோட்டம் ஒன்றில் கிடந்த நிலையில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரலிஹெல குடா கம்மான பகுதியை சேர்ந்த 49 வயதான லியன கங்கானம்கே லீலாரத்ன என்ற நபரே உயிரிழந்துள்ளார். உடலை அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.
அதிகளவில் மதுபானம் அருந்தியதால், சிறுநீரகங்கள் கரைந்து,அல்கஹோல் சிரோசிஸ் நிலைமை ஏற்பட்டதன் காரணமாக குருதியில் சக்கரை அளவு குறைந்து மயங்கி விழுந்ததால், இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என திஸ்ஸமஹாராம திடீர் மரண பரிசோதகர் கே.ஜே.சீ.நெரஞ்சன் தெரிவித்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இந்த நபர் மூன்று மாதங்கள் தினமும் நாள் முழுவதும் மது அருந்தியவாறு தனக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் தங்கி இருந்தாகவும் நீண்டகாலம் வீட்டுக்கு வெளியில் இருந்து வந்தாகவும் மனைவி கூறியுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
