கனடாவில் இருந்து யாழ் வந்தவர் சடலமாக மீட்பு!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் இன்றையதினம்(24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது, யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இருந்து பி.மரியதாசன்(வயது 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
உடற்கூற்று பரிசோதனை
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தவேளை, இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டுக்கு இன்று பிற்பகல் சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸாராருக்கு தகவல் வழங்கினார்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




