மிளகாய் தோட்டத்தில் மீட்கப்பட்ட சடலம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவசாயி உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று (21) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரி கண்டறிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) திகதி காலையில் களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய காசிநாதன் ஜெயகாந் என்பவர் தோட்டத்தில் வைத்து இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர், கூரிய ஆயுதங்களால் வெட்டியும் கொத்தியும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (21) சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர் பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது அவர் மீது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் 3 முறை துப்பாக்கி பிரயோகம் செய்ப்பட்டுள்ளதையடுத்து இந்த பெருக்கு ஏற்பட்ட காரணமாக உயிரிழந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்துவிட்டு அங்கு எந்த தடையப் பொருட்களையும் விட்டு செல்லாது தப்பி ஓடிய மர்ம நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.