ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது
திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதியில் கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு (23) குறித்த சந்தேக நபரைச் சோதனையிட்டபோது அவரிடமிருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் 01 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரைத் திருகோணமலை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.