மதவாச்சியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது(Photo)
மதவாச்சி பகுதியில் ஹெரோயின் தூளினை தனது உடமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி பகுதியில் நேற்று (19.01.2023) பிற்பகல் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
இரத்மலானை பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் தூள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.