திருகோணமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் 5 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
03ஆம் கட்டை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருளை கொண்டு வரும் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் திருகோணமலை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 5 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும், திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் 03 கட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
குறித்த சந்தேக நபரிடமிருந்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நாளை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
