மட்டக்களப்பில் 14 வருடமாக தலைமறைவாகியிருந்த குற்றவாளி கைது

Batticaloa Sri Lanka Police Investigation
By Bavan Mar 12, 2024 02:18 AM GMT
Report

மட்டக்களப்பில் உயர் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்து திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி 14 வருடங்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மதம் மாறி பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்த நிலையிலே நேற்று(11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் இரு சிறுவர்களை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைதாகி நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் முன்னிலையாகாமல் இருந்த நிலையில் உயர் நீதிமன்றில் 7 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்து திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 14 வருடங்களாக தலைமறைவாகி இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம்: ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை

வழக்கு விசாரணை

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நபர் நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் முடித்த நிலையில்,மனைவியின் இரு பிள்ளைகளை அடித்து சித்திரவரை செய்த குற்றச்சாட்டில் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.

மட்டக்களப்பில் 14 வருடமாக தலைமறைவாகியிருந்த குற்றவாளி கைது | Man Arrested After 14 Years In Batticaloa

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ள நிலையில் மட்டு உயர் நீதிமன்றில் கடந்த 2016 பெப்ரவரி 25ஆம் திகதி குறித்த நபரை குற்றவாளி என இனங்கண்டு கொண்ட நீதிமன்றம் அவருக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிட்டது.

அபராத தொகையை 3 மாதத்தில் செலுத்த தவறின் 3 மாதங்கள் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 2 இலட்சம் ரூபாவை செலுத்துமாறும் அதனை செலுத்த தவறின் 2 வருட சிறைத்தண்டனையும் வழங்கி அவருக்கு திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

மேற்கொள்ளப்பட்ட விசாரணை

குறித்த நபர் தொடர்பாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய நீதிமன்ற பிடிவிறாந்து பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர் அரசரட்டணம் கோகுலன், பொலிஸ் கான்ஸ்டபிள் தேவா ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமிகள் உட்பட குடும்பத்துடன் முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறி அங்கு ஹூசையன் என பெயரை மாற்றி பொலன்னறுவையில் வசித்து வந்துள்ளதை கண்டறிந்தனர்.

மட்டக்களப்பில் 14 வருடமாக தலைமறைவாகியிருந்த குற்றவாளி கைது | Man Arrested After 14 Years In Batticaloa

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் அரசரட்டணம் கோகுலன் குறித்த குற்றவாளியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சாமத்தியமாக பேசி நேற்று பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளார்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த தமிழர் திடீர் மரணம்

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த தமிழர் திடீர் மரணம்

கனடாவில் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள வாடகைத் தொகை

கனடாவில் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள வாடகைத் தொகை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US