வவுனியாவில் வாகன பற்றரிகளுடன் ஒருவர் கைது: பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
வவுனியா (Vavuniya) - நெளுக்குளம் பகுதியில் 12 வாகன பற்றரிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே.திவுல்வெவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, வாகனம் ஒன்றினை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய போது வாகனத்தில் இருந்து 12 வாகன பற்றரிகளை மீட்டெடுத்துள்ளனர்.
பொலிஸார் கோரிக்கை
இதனையடுத்து குறித்த வாகன பற்றரிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் சாரதியை கைது செய்ததுடன், அந்த வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாகன உரிமையாளர்கள் பற்றரிகள் எவையும் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ முறைப்பாட்டினை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த நான்கு வாரத்திற்கு முன்னர் வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் வாகன பற்றரிகளை களவாடிய குற்றச்சாட்டில் நான்கு வாகன பற்றரிகளுடன் இருவரை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri