திருகோணலையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கோமரங்கடவல மற்றும் மொரவெவ பிரதேசத்தில் பாடசாலை சிறார்களை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பிரத்தியேக வகுப்பிற்கு அழைத்துச் செல்வதைப் போன்று சந்தேகநபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது சந்கேதநபர் வசமாக சிக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நொச்சிகுளம் - ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் ஜவாஹீர் என்றழைக்கப்படும் றிழ்வான் (39 வயது) என்பவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் தொடர்பில் ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு இடம்பெற்று வரும் நிலையில் அவரை விசாரணைகளின் பின் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக மொரவெவ
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.