பிரித்தானியாவில் கத்தியுடன் திரிந்த நபர் - பொலிஸார் சுட்டுக்கொலை
பிரித்தானியாவில் டெர்பியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு வெளியே கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவர் ஆயுதமேந்திய அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அஸ்காட் டிரைவ் காவல் நிலையத்தின் வாகன தரிப்பிட பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.03 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை மருத்துவர்கள் வரும் வரை சம்பவ இடத்தில் வைத்து அவருக்கு அதிகாரிகள் முதலுதவி வழங்கியுள்ளனர்.
ஏர் ஆம்புலன்ஸ் வரவழைப்பு
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஏர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆயுதமேந்திய அதிகாரிகள் நிலைமையைச் சமாளித்ததால் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஜன்னல் உடைக்கப்பட்டதாக டெர்பிஷயர் காவலர் கூறினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் போடப்பட்டுள்ளதாகவும், அஸ்காட் டிரைவ் மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam