இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் தனுஷ்கோடியில் கைது (Photos)
தனுஷ்கோடி கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6)இரவு மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்து தங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் விசா முடிந்ததால் சட்டவிரோதமாகப் படகு மூலம் இலங்கைக்குச் செல்வதற்கு தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.
சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மெரைன் பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மெரைன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த சமிந்தன் (வயது-24) என தெரியவந்துள்ளது.



பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
