மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு
கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த பிரதீப் என்பவர் உயிரிழந்துள்ளார்.
20 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று (20.09.2023) உயிரிழந்துள்ளார்.
'மாளிகாவத்தை பிரதீப்' என அழைக்கப்படும் 38 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
கடந்த (01.09.2023) ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியிருந்தனர்.
போதைப்பொருள் கடத்தல்
இந்தச் சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
'கெசல்வத்த தினுக' குழுவினரால் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 'பஞ்சிகாவத்தே நெவில்' என்பவரின் சகாவும் ஆவார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
