இலங்கையிலிருந்து மலேசியா செல்வோர் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
இலங்கையிலிருந்து மலேசியா செல்வோர் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மலேசியாவிற்குப் பயணங்களை மேற்கொள்வோர் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று பரவுகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளிலிருந்து மலேசியாவிற்குப் பயணம் செய்வோருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உத்தரவு அமுல்படுத்தப்படும் அதேவேளை, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு இந்த தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் பிரவேசித்துத் தனிமைப்படுத்தலில் இருக்கும் போது 18ம் நாளில் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam