இலங்கையிலிருந்து மலேசியா செல்வோர் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
இலங்கையிலிருந்து மலேசியா செல்வோர் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மலேசியாவிற்குப் பயணங்களை மேற்கொள்வோர் 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று பரவுகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளிலிருந்து மலேசியாவிற்குப் பயணம் செய்வோருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் உத்தரவு அமுல்படுத்தப்படும் அதேவேளை, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு இந்த தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் பிரவேசித்துத் தனிமைப்படுத்தலில் இருக்கும் போது 18ம் நாளில் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri