பாரிய தொடருந்து விபத்துக்கள் நிகழலாம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையின் தொடருந்து பாதை வலையமைப்பில் சில தொடருந்து நிலையங்களில் காணப்படும் சமிக்ஞை தொகுதிகளில் உள்ள கோளாறு காரணமாக எதிர்வரும் காலங்களில் பெரும் தொடருந்து விபத்துகள் ஏற்படலாம் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று(04) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தொடருந்து சமிக்ஞை கோளாறுகள்
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச்சென்ற தொடருந்து, ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் கட்டுப்பாட்டு சமிக்ஞை கோளாறு காரணமாக பெரும் சிக்கலை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து சமிக்ஞை கோளாறுகளை நிவர்த்திக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு பெரிய தொடருந்து விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் செயல்பாட்டில் உள்ள தொடருந்து ஒளி வர்ண சமிக்ஞை அமைப்பு 1962 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மிகவும் எளிமையான முறை மூலம் இயக்கப்படுகிறது.
தொடருந்துகளை இயக்குவது ஆபத்தானது
இந்த வர்ண சமிக்ஞை அமைப்புகள் அனைத்தும் மருதானை தொடருந்து நிலையத்தில் அமைந்துள்ள மத்திய தொடருந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கப்படுகின்றன.
அத்தோடு கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள தொடருந்து வர்ண சமிக்ஞைகள் கண்டி, நவலப்பிட்டி மற்றும் அனுராதபுரம் துணை தொடருந்து அலுவலகங்களால் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில், இதுபோன்ற நிலைமைகளின் கீழ் தொடருந்துகளை இயக்குவது மிகவும் ஆபத்தானது என்று தொடருந்து தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
