மைத்திரி - விமல் இரகசிய சந்திப்பு! கொழும்பு ஊடகம் தகவல்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஆளும் கட்சியின் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கும், அரசாங்க பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. இதேவேளை, அரசில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகள் மீண்டுமொருமுறை தனிச்சந்திப்பொன்றை நடத்தியுள்ளமை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஆளும் கட்சியின் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கும், அரசாங்க பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
இதேவேளை, அரசில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகள் மீண்டுமொருமுறை தனிச்சந்திப்பொன்றை நடத்தியுள்ளமை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
