பிரிந்து சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களை அரவணைத்து புதிய இலக்குடன் பயணிக்க மைத்திரி திட்டம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஆதரவாளர்கள் அனைவரையும் மீண்டும் இணைத்து புதுப் பயணம் ஒன்றை தொடங்குவதற்கு மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபால தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய இலக்குடன் வெற்றியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த மிகப் பெரிய கட்சியாகும். அந்தக் கட்சி இப்போது விழுந்து கிடக்கின்றது.
அதை இனியாவது வெற்றிமிக்க கட்சியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தோன்றியுள்ளது.
கட்சியை மீண்டும் பலப்படுத்த உறுதி
இதன் முதல் கட்டமாக கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைத்து கொண்ட 9 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்த மைத்திரி தொடங்கியுள்ளார்.
அவரது வீட்டில் பல சுற்றுச் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை மீண்டும் பலப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் விளைவாக மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையில் அண்மையில் நாடாளுமன்றில் சந்திப்பொன்று இடம்பெற்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரியை அரசாங்கத்தில் இணைத்து அதில் இருந்து கொண்டே சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான
நகர்வு இது என்று சொல்லப்படுகின்றது.

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
