விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பிப்பதாக கிடைத்த புலனாய்வு தகவல்! மைத்திரி வெளிப்படுத்தும் விடயம்
87களில் வடக்கு அரசியல்வாதியான சிவசிதம்பரம், இந்தியாவுக்கு சென்று இலங்கை அரசாங்கத்தினால் வடக்கிற்கு அநீதிகள் இழைக்கப்படுவதாக தெரிவித்ததையடுத்து, பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்து - லங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்து - லங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அப்போதைய பிரதமர் பிரேமதாஸவும், பெரும்பாலான அமைச்சர்களும் அந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்கள்.
மேலும், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை ஆரம்பிப்பார்கள் என்றும் ஜே.வி.பியினர் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யவுள்ளார்கள் என்றும் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில்தான், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இவ்வாரத்திற்கான அரசியல் பார்வை,
