கொழும்பில் வெடித்த மற்றுமொரு போராட்டம்: மைதானமாக மாற்றப்பட்ட கொழும்பின் பிரதான வீதி(Video)
கொழும்பு - தெகிவளை பிரதான வீதியை மறித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனால் போராட்ட களத்தை மைதானமாக மாற்றி வீதியை மறித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றும், இன்று எரிபொருள் இல்லை என கூறியமையால் கோபமடைந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு-தெகிவளை பிரதான வீதியில் போக்குவரத்து தடைபட்டு காணப்பட்டுள்ளது. இருப்பினும் நோயாளர் காவு வண்டிகளுக்கு மாத்திரம் செல்வதற்கு மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் தமக்கான எரிபொருளை வழங்காதவரை அங்கிருந்து செல்லப் போவதில்லை எனவும் கூறியுள்ளனர்.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 15 மணி நேரம் முன்
மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த அந்த ஒரு பிரபலம்.... யார் பாருங்க, மாஸான புரொமோ இதோ Cineulagam
கீர்த்தி சுரேஷ், மிஸ்கின் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி' படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri