ஜனாதிபதி நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும்: மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை

Batticaloa Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples
By Kumar Oct 16, 2023 10:54 PM GMT
Report

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்கின்றோம்.அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் போதே எமது போராட்டத்தினை நிறுத்துவோம் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதி மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து நேற்றைய தினம் (16.10.2023) உயர்மட்ட கலந்துரையாடலை நடாத்தியிருந்தார்.

அதிரும் காசா எல்லைப்பகுதி: போருக்கு பின்னரான புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரேல்

அதிரும் காசா எல்லைப்பகுதி: போருக்கு பின்னரான புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரேல்


இதன்போது மேய்ச்சல் தரையினை ஆக்கிரமித்துள்ளவர்களை ஒரு வாரத்திற்குள் அகற்றவும் கால்நடை பண்ணையாளர்கள் அச்சமின்றி தமது கால்நடைகளை கொண்டுசெல்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இவற்றினை ஒரு வார காலத்திற்குள் நடாத்துவதற்கான பணிப்புரைகளை விடுத்திருந்தார்.

ஜனாதிபதி நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும்: மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை | Mailathamadu Madhavanai Cattle Farmers Ranil

இதேவேளை மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாகவும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் தமது சுழற்சிமுறையிலான போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

பிரச்சினைக்கான தீர்வு

ஜனாதிபதி தமது மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து முன்வைத்துள்ள தீர்மானத்தினை வரவேற்கின்றோம்.அவருக்கு கால்நடை பண்ணையாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும்: மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை | Mailathamadu Madhavanai Cattle Farmers Ranil

எனினும் ஜனாதிபதி முன்வைத்துள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறைப்படுத்தப்படும்போது நாங்கள் அங்கு செல்லமுடியும்.

ஜனாதிபதி நேற்று தீர்வினை முன்வைத்துள்ள அதேநேரம் இன்றைய தினம் மேய்ச்சல் தரைப்பகுதியில் உழவு இயந்திரங்கள் கொண்டு மேய்ச்சல் தரை காணிகள் விதைப்பு நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பில் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர்சிலை: அசாத்சாலியின் பகிரங்க குற்றச்சாட்டு (Video)

கொழும்பில் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர்சிலை: அசாத்சாலியின் பகிரங்க குற்றச்சாட்டு (Video)

அவர்களை அங்கிருந்து அகற்றாமல் நாங்கள் செல்வோமானால் அது எங்களது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைமையினையே ஏற்படுத்தும்.

எங்களுக்கு இன்று இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை ஜனாதிபதி மட்டுமே அவரால் மட்டுமே எமது பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்கமுடியும்.

நாங்கள் இந்த நாட்டில் வாழும் பூர்வீக மக்கள் எங்களுக்கான ஒரு தொழிலைக்கூட எங்களது நிலத்தில் செய்யமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும்: மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை | Mailathamadu Madhavanai Cattle Farmers Ranil

பண்ணையாளர்களின் குடும்பநிலை

எமது கணவர்மார்கள்,சகோதரர்கள் மேய்ச்சல் தரைக்கு செல்லும்போது அவர் வீட்டுக்கும் வரும் வரையில் நாங்கள் எங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கும் நிலைமையே ஏற்படுகின்றது என பண்ணையாளர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த 32 நாட்களாக எந்தவித வருமானமும் இன்றி வீதியில் இருக்கின்றோம்.

எமது குடும்பத்தின் நிலைமையினை சிந்தித்துப்பாருங்கள்.பிள்ளைகளின் கற்றல் செலவு, அவர்களுக்கான உணவுக்கான செலவு, வீட்டுச்செலவு என பல்வேறுபட்ட கஷ்டங்களை சுமந்தே எமது உறவுகள் வீதிகளில் போராடிவருகின்றனர்.

ஜனாதிபதி நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும்: மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை | Mailathamadu Madhavanai Cattle Farmers Ranil

அவர்கள் இந்த நாட்டினை பிரித்து கேட்கவில்லை.காலம் காலமாக பரம்பரைபரம்பரையாக எமது மேய்ச்சல் நிலங்களாக கால்நடை வளர்த்த பகுதிகளில் அவற்றினை வளர்க்கவே கோருகின்றோம். ஜனாதிபதி வழங்கிய உத்தரவாத்திற்கு அமைய அங்குள்ளவர்கள் அகற்றப்படும்போது தமது போராட்டத்தினை கைவிடுவோம் எனவும் அதுவரையில் போராட்டம் தொடரும்.

மேலும் ஜனாதிபதியின் உத்தரவாதத்தினை மதிப்பதாகவும் அவற்றினை வரவேற்பதுடன் நன்றியும் தெரிவித்துக்கொள்கின்றோம்.அந்த தீர்மானத்தை ஜனாதிபதி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

நிறைவேற்றும் போதுதான் நாங்கள் அப்பகுதிக்கு மாடுகளை கொண்டு செல்லமுடியும். அதுதான் கால்நடை பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பாக அமையும். ” என மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.நிமலன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் உருவாக்கிய திட்டமிட்ட பொறி! (Video)

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் உருவாக்கிய திட்டமிட்ட பொறி! (Video)

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து யாழில் போராட்டம்: பாலஸ்தீன மக்களுக்கு வலுக்கும் ஆதரவு

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து யாழில் போராட்டம்: பாலஸ்தீன மக்களுக்கு வலுக்கும் ஆதரவு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US