கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் பரிதாப நிலை
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையின் கே அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மதியம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டபோது இருவரும் முதலில் கைதிகளாக பதிவு செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு சிறைச்சாலை உடை வழங்கப்பட்டு கே அறையில் தடுத்து வைக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறைத்தண்டனை
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் நீண்ட கால தண்டனை அனுபவிக்கும் 100 கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்தும் அந்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், இரண்டு முன்னாள் அமைச்சர்களும் இன்று சிறைச்சாலை மருத்துவர் முன் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
உடல்நிலை
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள எந்தவொரு கைதியையும் முதலில் மருத்துவரிடம் முன்னிலைப்படுத்துவது வழமையான நடவடிக்கை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்களின் உடல்நிலையை சரிபார்க்கும் நோக்கத்தில் இவ்வாறு முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.