பணமோசடி விவகாரம்: மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சட்டவிரோதமான முறையில் சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்து பணமோசடி செய்ததாக கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த 27 மில்லியன் ரூபாவுக்கு மேல் கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
வழக்கு விசாரணை
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸாருக்கு சட்டத்தரணிகள் இடையூறு செய்யக் கூடாது: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |