கோட்டாபயவின் தந்திரத்தால் தப்பிய மகிந்த! தமிழ் மக்களிற்கு முக்கிய செய்தி (VIDEO)
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைகளின் போது தலைமறைவாகியிருந்த மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்காக மிகவும் தந்திரமாக கோட்டாபய ராஜபக்ச ரணிலை பிரதமராக நியமித்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றியுள்ளதாக இலங்கையிலுள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தந்திரமாக ரணிலை உள்ளே கொண்டு வந்து காய்களை நகர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த காய் நகர்த்தலின் மூலம் உலகத்தின் கவனமும், போராட்டத்தின் கவனமும், உள் நாட்டிலும்,வெளிநாட்டிலும் ரணில் மீது குவிந்துள்ளமையே இதன் மூலம் அடைந்த வெற்றியாக பார்க்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,