நாயை கொண்டு செல்ல உலங்குவானூர்தியை பயன்படுத்திய மகிந்த: ஜெகதீஸ்வரன் எம்.பி தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாயை கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை பயன்படுத்தினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் செலவீனங்களை நாங்கள் அதாவது எமது தோழர் அநுரகுமார திஸாநாயக்க குறைத்துள்ளார்.
செலவு
வெளிநாட்டு பயணங்களின் போதும் முன்னாள் ஜனாதிபதிமார் அதிக செலவீனங்களை செய்துள்ளனர்.இதற்கு மேலாக மகிந்த ராஜபக்ச 2013 ஆம் ஆண்டு 1144 மில்லியன் ரூபாயை வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்துள்ளார்.

இது யாருடைய பணம். இது தான் இந்த நிலைக்கு காரணம். எங்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முயலுங்கள். மகிந்த ராஜபக்ச தனது முழுக் குடும்பத்திற்கும் அரச நிதியை செலவு செய்தார்.நாயை கொண்டு செல்ல விமானத்தை பயன்படுத்தி உள்ளார்.
மகிந்தவின் மகன் யோசித ராஜபக்ச. யப்பான் செல்ல வெளிவிவகார அமைச்சரின் மூலம் 20 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.
பணம் கொள்ளை
கோட்டபாய ராஜபக்ச காலத்தில் அவரது மகன் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல் நகரில் அதிகாரி ஒருவர் இல்லாத நிலையில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று 21 மாதம் அங்கு இருந்தார்.

அதற்காக வெளிவிவகார அமைச்சின் பணம் செலவிடப்பட்டு உள்ளது. மகிந்த ராஜபக்ச ஐ.நாவில் உரையாற்றுகின்ற போது அதனை தொகுத்து வழங்க இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுக்கு 300 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார்.
இவ்வாறு தான் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. முன்னுதாரணமாக நடந்து காட்டுகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan