சரிந்த கட்சியை கட்டியெழுப்ப மகிந்த புது வியூகம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை(SLPP) பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற பிரிவினரை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது.
இதன் மூலுமு் சரிந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப மகிந்த ராஜபக்ச செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது நாடாளுமன்றத்திற்கு மூன்று உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

இந்நிலையில், கட்சியில் இருந்து விலகி ஏனைய கட்சிகளில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான பல உறுப்பினர்களும் தற்போது நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam