மாலைத்தீவுக்கு தப்பிச் செல்ல மகிந்த திட்டம் - மாலைத்தீவு ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்

Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Economic Crisis Maldives
By Murali May 25, 2022 12:36 AM GMT
Report

மாலைத்தீவு சபாநாயகர் மொஹமட் நஷீத்தின் உதவியுடன் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மாலைதீவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மாலைதீவு ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மொஹமட் நஷீத், இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான வழியை தற்போது முகாமைத்துவம் செய்து வருவதாக மாலைத்தீவு ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், மொஹமட் நஷீத் மற்றும் முன்னாள் பிரதமரின் குடும்பத்தினர் இருவரும் இந்த தகவலை முற்றாக மறுத்துள்ளனர்.

மாலைத்தீவுக்கு தப்பிச் செல்ல மகிந்த திட்டம் - மாலைத்தீவு ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் | Mahinda S Plan To Escape To Maldives

“மாலைத்தீவு ஜர்னலில் உள்ள கதை ஒரு முழுமையான கட்டுக்கதை. அவர்களின் பொய்களின் மூலம், அதன் பின்னணியில் உள்ளவர்கள் பத்திரிகைத் தொழிலுக்கு பெரும் அவதூறு செய்கிறார்கள், ”என நஷீத் ட்வீட் செய்துள்ளார்.


இந்நிலையில், நஷீத் இலங்கைக்கு உதவுவதற்காகவே இலங்கையில் இருப்பதாகவும், தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபடக் கூடாது என்று மாலைத்தீவு நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், எனது தந்தை இலங்கையை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவில் வில்லா வாங்குவதில் தனது தந்தை கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மொஹமட் நஷீதிடம் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் கடவுச்சீட்டுகளின் பிரதிகள் இருப்பதாக ஊடகவியலாளர் அஹமட் அஸான் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், தனது கடவுச் சீட்டு பிரதியை எந்த மாலைத்தீவு அதிகாரிக்கும் கொடுத்ததில்லை. கோட்டை மாஜிஸ்திரேட்டிடம் எனது கடவுச் சீட்டு உள்ளது, அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது பயணத் தடையில் இருக்கிறேன்.

நான் பயணம் செய்ய வேண்டுமென்றால், மாலைத்தீவு அல்லது இலங்கை அதிகாரிகளின் உதவி எனக்குத் தேவை' என்று நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.


மகிந்த ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் மொஹமட் நஷீதை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மாலைதீவு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மாலைத்தீவு ஜர்னலிடம் தெரிவித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காணும் வரை தனது குடும்பத்தினர் மாலைதீவில் தங்க அனுமதிக்குமாறு நஷீத்திடம் மகிந்த ராஜபக்ச கோரியதாக மாலைத்தீவு ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, மகிந்த ராஜபக்ச முதலில் தனது குடும்பத்தை மாலைதீவின் பிரபல சுற்றுலா வர்த்தகரான சம்பா மொஹமட் மூசாவுக்குச் சொந்தமான குடியிருப்பில் குடியமர்த்த திட்டமிட்டிருந்தார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மூசாவுக்கு ராஜபக்சக்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிந்ததே என மாலைத்தீவு ஜர்னல் தெரிவித்துள்ளது. இருப்பினும், நஷீத் இந்த யோசனையை நிராகரித்ததாகவும், மூசா ஒரு நம்பகத்தன்மையற்ற பாத்திரம் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாற்றாக, இந்தியாவில் சோனு ஷிவ்தாசனிக்கு சொந்தமான சொனேவா ஃபுஷியில் உள்ள ஒரு தனியார் வீட்டை வாங்க நஷீத் முன்மொழிந்துள்ளார் என்று மாலைத்தீவு ஜர்னல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியுடன் (BJP) ஷிவ்தாசனி நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவு ஜர்னலின் கூற்றுப்படி, சோனு ஷிவ்தாசானி ஒரு தனியார் வில்லாவை 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ராஜபக்ச குடும்பத்திற்கு விற்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24,000 சதுர அடி, ஆறு அறைகள் கொண்ட வீட்டை வாங்க ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று மாலைத்தீவு ஜர்னல் தெரிவித்துள்ளது.

இது 12 பெரியவர்கள் மற்றும் 6 குழந்தைகள் வசதியாக தங்கக்கூடியதுடன், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US