மாலைத்தீவுக்கு தப்பிச் செல்ல மகிந்த திட்டம் - மாலைத்தீவு ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்
மாலைத்தீவு சபாநாயகர் மொஹமட் நஷீத்தின் உதவியுடன் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மாலைதீவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மாலைதீவு ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மொஹமட் நஷீத், இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான வழியை தற்போது முகாமைத்துவம் செய்து வருவதாக மாலைத்தீவு ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், மொஹமட் நஷீத் மற்றும் முன்னாள் பிரதமரின் குடும்பத்தினர் இருவரும் இந்த தகவலை முற்றாக மறுத்துள்ளனர்.
“மாலைத்தீவு ஜர்னலில் உள்ள கதை ஒரு முழுமையான கட்டுக்கதை. அவர்களின் பொய்களின் மூலம், அதன் பின்னணியில் உள்ளவர்கள் பத்திரிகைத் தொழிலுக்கு பெரும் அவதூறு செய்கிறார்கள், ”என நஷீத் ட்வீட் செய்துள்ளார்.
The story in Maldives Journal, a blog in the Maldives, is a complete fabrication. Through their lies, the people behind it do a grave disservice to the profession of journalism. https://t.co/WaDjvcR0S8
— Mohamed Nasheed (@MohamedNasheed) May 24, 2022
இந்நிலையில், நஷீத் இலங்கைக்கு உதவுவதற்காகவே இலங்கையில் இருப்பதாகவும், தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபடக் கூடாது என்று மாலைத்தீவு நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், எனது தந்தை இலங்கையை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவில் வில்லா வாங்குவதில் தனது தந்தை கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மொஹமட் நஷீதிடம் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் கடவுச்சீட்டுகளின் பிரதிகள் இருப்பதாக ஊடகவியலாளர் அஹமட் அஸான் தெரிவித்துள்ளார்.
If there is no truth, then can you explain why you sent copies of your family's passports to @MohamedNasheed which were then shared with govt officials? @Jamz5251 @munza14 @roelraymond
— Ahmed Azaan (@axanner) May 24, 2022
And what about the passport copies of your son & wife’s? Why did @MohamedNasheed come into possession of those copies? @rugiyyamohamed pls explain? pic.twitter.com/jFSN3s0IMx
— Ahmed Azaan (@axanner) May 24, 2022
இந்நிலையில், தனது கடவுச் சீட்டு பிரதியை எந்த மாலைத்தீவு அதிகாரிக்கும் கொடுத்ததில்லை. கோட்டை மாஜிஸ்திரேட்டிடம் எனது கடவுச் சீட்டு உள்ளது, அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது பயணத் தடையில் இருக்கிறேன்.
நான் பயணம் செய்ய வேண்டுமென்றால், மாலைத்தீவு அல்லது இலங்கை அதிகாரிகளின் உதவி எனக்குத் தேவை' என்று நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.
Once again the media is sensationalizing things just to attract more readers,this time the #MDV audience as well as the #LKA ones. My father has no intention of leaving #LKA & there is no truth of any plans of him moving to #MDV or buying any villa there.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 24, 2022
I assure u no such thing happened, its best u check ur sources.Friendships between the ppl of #MDV & #LKA has always been strong.I personally believe that it is in the best interest of that friendship that we keep domestic politics out. @MDVinSriLanka
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 24, 2022
மகிந்த ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் மொஹமட் நஷீதை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மாலைதீவு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மாலைத்தீவு ஜர்னலிடம் தெரிவித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காணும் வரை தனது குடும்பத்தினர் மாலைதீவில் தங்க அனுமதிக்குமாறு நஷீத்திடம் மகிந்த ராஜபக்ச கோரியதாக மாலைத்தீவு ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, மகிந்த ராஜபக்ச முதலில் தனது குடும்பத்தை மாலைதீவின் பிரபல சுற்றுலா வர்த்தகரான சம்பா மொஹமட் மூசாவுக்குச் சொந்தமான குடியிருப்பில் குடியமர்த்த திட்டமிட்டிருந்தார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மூசாவுக்கு ராஜபக்சக்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிந்ததே என மாலைத்தீவு ஜர்னல் தெரிவித்துள்ளது. இருப்பினும், நஷீத் இந்த யோசனையை நிராகரித்ததாகவும், மூசா ஒரு நம்பகத்தன்மையற்ற பாத்திரம் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The report today in the Maldivian blog @MaldivesJournal , which erroneously stated that Soneva has agreed to sell a private villa in the Maldives to the Rajapaksa family, among other claims, is completely false.
— Sonu Shivdasani (@SonuShivdasani) May 24, 2022
மாற்றாக, இந்தியாவில் சோனு ஷிவ்தாசனிக்கு சொந்தமான சொனேவா ஃபுஷியில் உள்ள ஒரு தனியார் வீட்டை வாங்க நஷீத் முன்மொழிந்துள்ளார் என்று மாலைத்தீவு ஜர்னல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியுடன் (BJP) ஷிவ்தாசனி நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவு ஜர்னலின் கூற்றுப்படி, சோனு ஷிவ்தாசானி ஒரு தனியார் வில்லாவை 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ராஜபக்ச குடும்பத்திற்கு விற்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24,000 சதுர அடி, ஆறு அறைகள் கொண்ட வீட்டை வாங்க ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று மாலைத்தீவு ஜர்னல் தெரிவித்துள்ளது.
இது 12 பெரியவர்கள் மற்றும் 6 குழந்தைகள் வசதியாக தங்கக்கூடியதுடன், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் மற்றும் பிற வசதிகளைக் கொண்டுள்ளது என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.