நாடாளுமன்ற தேர்தல் குறித்து மகிந்த விடுத்துள்ள வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற பசில் ராஜபக்சவின் யோசனையை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்கள் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். ஆனால் பசில் முன்வைத்த யோசனையே சிறப்பானது என்றும், நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தி அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பெரும் வெற்றி
இல்லாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற எந்த கட்சியும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலில் நியாயத்தன்மை காணப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri
