நாடாளுமன்ற தேர்தல் குறித்து மகிந்த விடுத்துள்ள வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற பசில் ராஜபக்சவின் யோசனையை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாங்கள் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். ஆனால் பசில் முன்வைத்த யோசனையே சிறப்பானது என்றும், நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தி அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பெரும் வெற்றி
இல்லாவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற எந்த கட்சியும் நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலில் நியாயத்தன்மை காணப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
