மகிந்தவை பிரதமராக்குமாறு ரணிலிடம் கோரிக்கை..! மொட்டு கட்சி போட்டுடைத்த விடயம்
மகிந்தவை பிரதமராக நியமிப்பது குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முறையான கோரிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை
மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறையான அல்லது உத்தியோகபூர்வ கோரிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றவாறான தகவல்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.
இவ்வாறான சூழலில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலும் கூட மகிந்த பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் எனவும், இதற்காகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலரும் ஊகங்களை வெளிப்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
