ஜனாதிபதி தேர்தலில் ரணில் எமது ஒத்துழைப்பை கோரவில்லை: மகிந்த ராஜபக்ச
ஜனாதிபதி தேர்தலில் எமது ஒத்துழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கோரவில்லை. தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கொழும்பு (Colombo) - மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று (04.05.2024) இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டின் பின்னர் ஊடகங்கள் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தலில் வெற்றி பெறுவதே எமது அரசியலின் அடுத்த பிரதான திட்டமாகும். எனவே தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும், திட்டங்களை செயற்படுத்துவோம்.
ஜனாதிபதி வேட்பாளர் பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை. எமது வேட்பாளரை கட்டாயம் களமிறக்குவோம்.
அத்துடன் வேட்பாளர் பற்றிய தீர்மானத்தில் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாடு இன்னும் இல்லை. அவர் எம்மிடம் ஒத்துழைப்பு கோரவில்லை.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
