வரலாற்றில் முதன்முறையாக மகிந்த ராஜபக்ச காலத்தில் நடந்த விடயம்..
உலக வரலாற்றிலே தொடர்ச்சியாக 3 தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வரலாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தான் இடம்பெற்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“மாமனிதர் ஜோசப் பராரஜசிங்கம், மாமனிதர் ரவிராஜ், மாமனிதர் சிவராஜ் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, மகேஸ்வரன் என பலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு 2004ஆம் ஆண்டளவில் 37 பேர் ஆதரவாக இருந்தார்கள். அவர்கள் மக்கள் விடுதலை முன்ணி அமைப்பினை சார்ந்தவர்கள்.
தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அநுரகுமார திசாநாயக்கவும், அவரது ஆட்சிகாலத்தில் விவசாய காணி அமைச்சராக அவரது காலத்தில் இருந்தார்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..
யாழின் அத்திப்பட்டி கிராமம்! 35 வருடங்களின் பின் அம்பலமாகும் உண்மைகள் - கிணற்றுக்குள் மனிதப்புதைகுழி
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri