மகிந்தவின் தோட்டத்தில் சட்டவிரோத வளர்ப்பு யானைகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான தோட்டமொன்றில் சட்டவிரோதமான முறையில் இரண்டு வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் தகவல்கள் கசிந்துள்ளன.
மகிந்த ராஜபக்சவின் தங்காலை, வீரகெடிய வீதியில் உள்ள தோட்டத்திலேயே இரண்டு யானைகள் இவ்வாறு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறித்த இரண்டு யானைகளும் இலங்கையின் வளர்ப்பு யானைகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழக்கொன்றையும் பதிவு செய்திருந்தது.
சட்டவிரோதமாக பராமரிப்பு
எனினும் குறித்த யானைகள் இரண்டும் சன்னஸ் பத்திரம் (அரசாங்க அன்பளிப்பு) மூலம் மகிந்த ராஜபக்சவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, அந்த வழக்கு நீர்த்துப்போகச் செய்யப்பட்டது.
எனினும் குறித்த இரண்டு யானைகளும் சட்டவிரோதமாகவே மகிந்த ராஜபக்சவின் பராமரிப்பில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri