மீண்டும் நாட்டை கைப்பற்றுங்கள்! மஹிந்தவிற்கு பகிரங்க அழைப்பு விடுத்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Mahinda Rajapaksha Gotabhaya Rajapaksha Muruthedduve Aananda Tero
By Benat Oct 20, 2021 11:14 AM GMT
Report

நாட்டை   கட்டியெழுப்ப பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) நாட்டை மீ்ண்டும் கைப்பற்ற வேண்டும் என தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்(Muruthedduve Aananda Tero) தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்சவின்(Gotabhaya Rajapaksha) சுபீட்ச நோக்குடன் நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று நினைத்தாலும், 200 சதவீத மக்கள் தற்போது அரசாங்கத்தால் ஏமாற்றமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் நாட்டை கட்டியெழுப்ப அனுபவமிக்க மஹிந்த ராஜபக்ச அவசியம். மஹிந்த ராஜபக்சவால் மட்டுமே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

இரசாயன உர இறக்குமதி தடையால் நாட்டினுடைய விவசாய நடவடிக்கைகள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. தான்தோன்றித்தனமான முடிவே இதற்கு காரணம். 

மஹிந்த ராஜபக்சவை நம்பியே 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர். நாட்டை பாதுகாக்க நினைத்தால் மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக நாலா பக்கங்களிலும் இருந்து எதிர்ப்புகள் வலுப் பெறுவதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும்.  நான் கட்டிய வீட்டில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரச ஆட்சிக்குக் கொண்டு வருவதில் முன்னின்று செயற்பட்டவர்களுள் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றார்.

எனினும் கடந்த சில காலங்களாக அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை இவர் முன்வைத்து வருவதுடன் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி வருகின்றார்.

மேலும், இந்த அரசாங்கம் தற்போதைய சூழலில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இந்த அரசின் எதிர்காலத்திற்கு அது பாதிப்பாக அமையும் எனவும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US