மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும்: ரணில்

Dollar to Sri Lankan Rupee Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Rohitha Abeygunawardana
By Kamal Jul 07, 2024 03:07 AM GMT
Report

தான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து என்ன செய்கின்றீர்கள் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.70 முதல் தாமும் மகிந்தவும் இரு வேறு திசைகளில் பயணித்தவர்கள் எனவும் எப்போதும் எதிரிகளாகவே இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் 27 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்


மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும்: ரணில் | Mahinda Not My Friend

இரு வேறு திசைகளில் பயணித்தவர்கள்

எனினும் நாட்டின் நெருக்கடியான நிலைமைகளில் மக்களின் நலனுக்காக ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நாட்டை எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டுமென மகிந்த தமக்கு அறிவுரை கூறியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் கவிழும் போது மரபு ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சஜித் பிரேமதாச காணாமல்போய்விட்டார்.பொறுப்பினை ஏற்காது ஒளிந்து விட்டார்.எதிர்க்கட்சித் தலைவரின் ஜனநாயக ரீதியான பொறுப்பினை அவர் தட்டிக் கழித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக் காலப் பகுதியில் எங்கிருந்தார் என யாருக்கும் தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும்: ரணில் | Mahinda Not My Friend

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் யாசகம் 

உலகில் எந்தவொரு நாட்டிலும் நடக்காத விடயம் இலங்கையில் நடைபெற்றது, இரண்டு நாட்கள் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ள எவரும் இருக்கவில்லை. பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கம் யாசகம் செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

நானாக இந்தப் பதவியை கேட்கவில்லை, உண்மையில் சஜித் பதவியை ஏற்றுக் கொண்டிருந்தால் நான் அவருக்கு உதவியிருப்பேன். நாடு ஒன்று நெருக்கடியில் விழும் போது பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும்: ரணில் | Mahinda Not My Friend

நாம் எவ்வளவு முரண்பட்டுக்கொண்டாலும் ஒரு கட்சி தோல்வியடைந்த போது எவ்வித முரண்பாடுகளும் இன்றி பதவிகளை ஒப்படைத்து விட்டு வெளியேறிய ஒரே நாடு இந்த ஆசியாவிலேயே இலங்கை மட்டும் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு அடித்துக் கொண்டாலும் மாலை வேளைகளில் சந்திப்போம் பேசுவோம். திருமண நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்றுள்ளோம்.மொட்டு கட்சி மட்டுமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர் என  குறிப்பிட்டுள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும் அதனையும் ஏற்றுக் கொண்டு நாட்டை ஆட்சி செய்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் ரூபாவின் பெறுமதி அதிகரித்திருக்கும்: ரணில் | Mahinda Not My Friend

இந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என எனக்கு நன்றாகத் தெரியும் அதன் காரணமாகவே இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். மொட்டு கட்சியின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 450 ரூபாவிற்கு மேல் அதிகரித்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் அல்ல தேங்காய் எண்ணெய் கூட நாட்டில் இருந்திருக்காது.மொட்டு கட்சியின் ஒத்துழைப்பு இன்றி அமைச்சர்களின் ஒத்துழைப்பு இன்றி தனியாக இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்க முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளின் சம்பளத்திற்காக அரசு செலவிட்ட தொகை : வெளியான தகவல்

பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளின் சம்பளத்திற்காக அரசு செலவிட்ட தொகை : வெளியான தகவல்

சம்பந்தனின் மறைவு ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது: ஶ்ரீகாந்தா

சம்பந்தனின் மறைவு ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது: ஶ்ரீகாந்தா


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US