இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மஹிந்தவா? பசிலா? பிரபல சோதிடர் ஆரூடம்
ராஜபக்ஷ குடும்பத்தில் ராஜயோகம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குமே உள்ளதென பிரபல சோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர ஆருடம் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அரசாங்கம் உரிய முறையில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல நேரிடும் என கிரக நிலைக்கமைய காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள சனி மற்றும் குரு பெயர்ச்சி காரணமாக நவம்பர் மாதம் 20ஆம் திகதியின் பின்னர் நாட்டினுள் புதிய அரசியல் சக்தி ஒன்று முன்வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சக்தியினால் எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஆட்சி கைப்பற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
