மஹிந்த ஓரங்கட்டப்படுகிறார்! இருவேறு திசைகளில் பசில் மற்றும் கோட்டாபய - விரைவில் ஆட்சி மாற்றம்?

Basil rajapaksha Gotabhaya rajapaksha Mahinda rajapaksha Muruthedduve aananda thero
By Benat Jul 04, 2021 09:24 AM GMT
Report

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க நினைக்கின்றனர். இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓரங்கட்டப்பட்டுள்ளார் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு நாம் எதிர்ப்பில்லை. அவர் முன்னைய ராஜபக்ச ஆட்சியிலும் நன்றாக பணியாற்றியவர்.

ஆனால் இன்றுள்ள நிலைமையில் அவர் வருவதால் என்ன செய்துவிட முடியும். அவரால் சரியான தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

நாட்டின் நெருக்கடி நிலைமைகளில் அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்படுவதனால் எவராலும் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது.

பசில் ராஜபக்சவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க நினைக்கின்றனர். மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஏனைய இருவரும் பயணித்தால் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கலாம்.

ஆனால் இவர்கள் இருவரும் தனித்தனி பயணத்தை முன்னெடுக்க நினைக்கின்றனர் என தோன்றுகின்றது. இன்று அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இங்கு வருபவர்களும் அதனையே கூறிக்கொண்டுள்ளனர். ஆகவே அரசாங்கத்தில் உறுதியான நிலைப்பாட்டில் எவரும் இல்லை என்பது வெளிப்படுகின்றது.

இந்த முரண்பாடுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை. ஏன் மஹிந்த ராஜபக்ச அமைதியாக உள்ளார் என நானும் கேள்வி எழுப்புகின்றேன். அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்றே தெரிகிறது.

சுற்றியுள்ள நபர்களின் மூலமாகவே ஜனாதிபதி தவறான தீர்மானங்களை எடுக்கின்றார். ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டிய இடத்தில் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளாது தவறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

மஹிந்த ராஜபக்சவை புறக்கணித்து செயற்படுகின்றனர் என்பதும் தென்படுகின்றது. இதுவே ஜனாதிபதி தவறிழைக்கும் இடமாகும். அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் எழவும் இதுவே காரணமாகியுள்ளது. இவர்களின் முரண்பாடுகள் காரணமாக நாட்டை நாசமாக்க இடமளிக்க முடியாது.

அரசாங்கத்திற்குள் பல குறைபாடுகள் உள்ளன. அதனை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகின்றோம். இதற்கு அரசாங்கம் செவிமடுக்கவில்லை என்றால் அரசாங்கத்தை எதிர்த்து வீதிக்கு இறங்க நேரிடும். அதேபோல் ஆட்சி மாற்றத்தை உருவாக்கவும் நேரிடும். அதற்கு தேவை வந்துள்ளதாக உணர்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US