மகிந்த தொடர்பில் ஜாக்சன் ஆண்டனியின் மனைவி வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்தபோது, தனது இதயத்தில் இருந்த பல தீப்பிழம்புகள் அணைந்துவிட்டதாகவும், புத்தரைக் கண்டது போல் நிம்மதி அடைந்ததாகவும் மறைந்த மூத்த கலைஞர்ஜாக்சன் ஆண்டனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார்.
தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் மகிந்த ராஜபக்சவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“நான் இந்த பயணத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன், அவர் மீண்டும் வருவார் என்று காத்திருந்தேன்.
எனவே, அவர் செய்த மற்றும் சொன்னவற்றின் நன்மைகளை உண்மையிலேயே சிந்திக்க இன்று நான் இங்கு வந்தேன்.நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நாங்கள் உண்மையில் அவரைப் பார்த்தபோது, எங்கள் இதயங்களில் இருந்த பல தீப்பிழம்புகள் அணைந்தன, புத்தரைக் கண்டது போல் நிம்மதி அடைந்தோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan