யோஷிதவிற்கு தொடரும் வழக்கு.. மகிந்தவின் சகா 3 இலட்சம் டொலருடன் தலைமறைவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மீது மீண்டுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்தததாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், அவர்களின் தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா தொடர்பிலும் பாரிய நிதிக் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இது உட்பட நாட்டில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,